தமிழ்நாடு வேளாண் பொறியியல் துறை மூலம் செயல்படுத்தப்படும், வேளாண் இயந்திரமயமாக்கல் உப திட்டத்தின் கீழ், விவசாயிகளுக்கு மானிய விலையில் பண்ணை இயந்திரங்கள் வழங்கப்படுகின்றன. அந்த வகையில் ஆண்டுதோறும் பவர் டில்லர்கள் வழங்கப்படுவது வழக்கம். 2023-24-ம் ஆண்டுக்கு 5,000 பவர் டில்லர்கள் 50 சதவிகித மானியத்தில் வழங்கப்படும் எனத் தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.